திருக்குறள்

892.

பெரியாரைப் பேணா தொழுகிற் பெரியாராற் பேரா இடும்பை தரும்.

திருக்குறள் 892

பெரியாரைப் பேணா தொழுகிற் பெரியாராற் பேரா இடும்பை தரும்.

பொருள்:

பெரியோர்களை மதிக்காமல் நடந்து கொண்டால் நீங்காத பெருந்துன்பத்தை அடைய நேரிடும்.

மு.வரததாசனார் உரை:

ஆற்றல் மிகுந்த பெரியாரை விரும்பி மதிக்காமல் நடந்தால், அது அப் பெரியாரால் நீங்காத துன்பத்தைத் தருவதாகும்.

சாலமன் பாப்பையா உரை:

பெரியவர்களை மதிக்காமல் நடந்தால், அப்பெரியவர்களால் தீராத துன்பம் வரும்.